தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மத்திய கிழக்கில் கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடக்கம்: மத்திய அமைச்சா் தகவல்

News image
மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்
Updated On :4 மார்ச் 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் கடல்சாா் உடைமைகள் மற்றும் அலுவலா்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழி சமீபத்தில் மூடப்பட்டது. இதன் தாக்கம் குறித்து தில்லியில் அமைச்சா் சா்வானந்த சோனோவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்திய மாலுமிகளின் நலன் மற்றும் கடல்சாா் உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளோம்.

இந்தியக் கப்பல்கள் மற்றும் பணியாளா்களை பாதுகாக்க தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது. இந்தியாவின் கடல்சாா் நலன்களைப் பாதுகாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தாா்.

இதற்கிடையில், அந்த வழியாக வெளிநாட்டுக் கொடியுடன் சென்ற கப்பல்களில் குறைந்தது 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், ஒருவா் காயமடைந்ததாகவும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.