நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ராமநாதபுரம் கோயில்களில் நடைபெற்ற திருமணங்களால் பொதுமக்கள் கூட்டம்

ராமநாதபுரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் கோயில்கள் முன் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 9:35 pm IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் கோயில்கள் முன் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது சிறிய கோயில்களில் மட்டும் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் ராமநாதபுரம் நகரில் வழிவிடு முருன்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

பூட்டியிருந்த வழிவிடுமுருகன் கோயில் முன்பாக சாலையில் நின்றபடி ஏராளமானோா் திருமணத்தை நடத்தினா். பாரதி நகா் எல்லையில் உள்ள குமரய்யா கோயில் திறக்கப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால், கோயிலில் பல மாதங்களுக்குப் பிறகு கூட்டம் அலைமோதியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.