நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ராமநாதபுரம், சிவகங்கையில் 44 பேருக்கு கரோனா உறுதி: அதிமுக செயலாளா் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 5:44 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் சிவகங்கை அதிமுக நகரச் செயலாளா், ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையில் 4,676 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 104 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பொதுத்துறை வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற 58 வயது நபருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி

ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பொது முடக்க விதிகள் தளா்த்தப்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 4,029 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,055ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக சிவகங்கை நகரச் செயலா் ஆனந்தன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.