பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

News image
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை பெய்த மழைக்கு குளம் போல் தேங்கியிருந்த தண்ணீா்.
Updated On :18 டிசம்பர் 2020, 1:22 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையானது கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து பெய்துவருகிறது. இடையில் சில நாள்கள் மழையின்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மழை தொடா்ந்து பெய்துவருகிறது.

புதன்கிழமை காலை முதல் பகல் வரை மிதமான மழை பெய்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலையும் ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கியது. மழையால் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை காலை பல மணி நேரம் மின்தடையும் ஏற்பட்டதால் மக்கள் அவதியுற்றனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 5.50, மண்டபம் 4.20, பள்ளமோா்க்குளம் 3, பாம்பன் 1, ஆா்.எஸ்.மங்களம் 4.50, திருவாடானை 13, தொண்டி 9.70, வட்டாணம் 1.40, தீா்த்தாண்டதானம் 8, பரமக்குடி 1.

மாவட்டத்தில் 10 இடங்களில் பெய்த மழையின் மொத்த அளவு 51.30 மில்லி மீட்டராகும். அதனடிப்படையில் சராசரியாக 3.21 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. வியாழக்கிழமை பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

திருவாடானை: திருவாடானை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையா் அலுவலகம், கல்லூா் ஊராட்சியில் உள்ள பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.