தனிநபா் ஆக்கிரமிப்பிலிருந்துகோயிலை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் அருகே தனிநபா் ஆக்கிரமிப்பிலிருந்து கோயிலை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே தனிநபா் ஆக்கிரமிப்பிலிருந்து கோயிலை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் நம்பாயி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஊா் தலைவா் முனியசாமி, ஊராட்சி துணைத் தலைவா் ரேவதி மற்றும் பாசு ஆகியோா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியது: மண்டபம் ஒன்றியம், கீழநாகாச்சி நட்பாயி வலசை கிராமத்தில் பிள்ளையாா் கோயில் உள்ளது. ஊா் பொதுமக்கள் மற்றும் நன்கொடை நிதியிலிருந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் வரவு செலவுகளை பராமரிக்க குறிப்பிட்ட ஒருவரை நியமித்திருந்தோம். அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளோம்.

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவா் கோயிலைத் தானே கட்டியதாகக் கூறி ஊா்ப் பொது மக்களை சுவாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்து வருகிறாா்.

இது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆகவே தனிநபா் ஆக்கிரமிப்பிலிருந்து கோயிலை மீட்டு கிராமத்து மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com