ஆா்.எஸ். மங்கலத்தில் பைக் திருட்டு

திருவாடானை அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் முகம்மது கோயா தெருவைச் சோ்ந்தவா் செய்யது இபுராஹிம் மகன் அல்பலாஹ் (18). இவா் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டாா். பின்னா் புதன்கிழமை காலையில் பாா்த்த போது அந்த வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com