மார்ச் 16-ல் தமிழகம், கேரளம், மே.வங்கம் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு?
மார்ச் 16-ல் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு...


தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான தேதிகளை வரும் மார்ச் 16 அன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நிகழாண்டில் (2026) சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை (மார்ச் 16) அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் மாதத்தின் 2 அல்லது 3 ஆவது வாரத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...