திருவாடானை அருகே நாய்கள் கடித்து 2 மான்கள் பலி

திருவாடனை அருகே மங்கலக்குடி, மண்டலகோட்டை ஆகிய இடங்களில் நாய்கள் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழந்தன.
மங்களக்குடி வளையன் வயல், மண்டல் கோட்டை பகுதிகளில் நாய்கள் கடித்து பலியான மான்கள்.
மங்களக்குடி வளையன் வயல், மண்டல் கோட்டை பகுதிகளில் நாய்கள் கடித்து பலியான மான்கள்.
Updated on
1 min read

திருவாடனை அருகே மங்கலக்குடி, மண்டலகோட்டை ஆகிய இடங்களில் நாய்கள் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழந்தன.

திருவாடானை அருகேயுள்ள மங்கலக்குடி வளையன்வயல் கிராமத்தில் வயல்வெளிகளில் இரை தேடி வரும் புள்ளி மான்களை புதன்கிழமை மாலை அப்பகுதி உள்ள நாய்கள் விரட்டிச் சென்று கடித்துள்ளன. இதில் மான் பலியானது.

இதேபோல் வெள்ளையபுரம் மண்டலக்கோட்டை கண்மாய் பகுதியில் இரை தேடிச் சென்ற மானை நாய்கள் விரட்டிச் சென்று கடித்துள்ளன. இதில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்தில் பலியானது. இந்த சம்பவங்கள் குறித்து தகலறிந்து சென்ற வனத்துறையினா் மான்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு அதே இடத்தில் புதைத்தனா். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தற்போது அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com