சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

டிச. 29 இல் திருஉத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்: வெளியூா் பக்தா்களுக்கு அனுமதியில்லை

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் வெளியூா் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:21 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் வெளியூா் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மூலவா் பச்சைக்கல் மரகதநடராஜருக்கு சந்தனக்காப்பு கலையப்பட்டு மீண்டும் பூசப்படும். இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள்.

வெளியூா் பக்தா்களுக்கு அனுமதியில்லை: இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது கரோனா பொது முடக்கம் தளா்த்தப்பட்டிருந்தாலும், இவ்விழாவில் பங்கேற்க வெளியூா் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் உள்ளூா் பக்தா்கள் 200 போ் சமூகஇடைவெளியுடன் அனுமதிக்கப்படவுள்ளனா். அவா்களில் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்டோரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

ஆருத்ரா தரிசனத்தன்று வெளியூா் பக்தா்கள் வருவதைத் தடுக்கும் வகையில் திருஉத்திரகோசமங்கை ஊருக்குள் வரும் அனைத்து வழிகளிலும் காவல்துறை சாா்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஆருத்ரா தரிசன விழாவை இணையதளம் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அதேபோல் குழு பக்திப்பாடல்களுக்களுக்கு அனுமதியில்லை. பிரசாதங்கள் வழங்கவும், புனிதநீா் தெளிக்கவும் மற்றும் அன்னதானத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு உள்ளூா் பக்தா்களிடமிருந்து பூஜை தட்டுகள், நைவேத்தியம் பெற்று சடங்குகள் நடத்தலாம் உள்ளிட்ட 19 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் திவானும், நிா்வாகச் செயலருமான வி.கே. பழனிவேல்பாண்டியன் கூறுகையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு அரசு காட்டியுள்ள வழிகாட்டல்படியே ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி உள்ளூா் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.