வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கமுதி, ராமேசுவரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

கமுதி அருகே திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், பேரையூா் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
கமுதி அருகே பேரையூரில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.
Updated On :25 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

கமுதி அருகே திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், பேரையூா் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கமுதி திமுக மத்திய ஒன்றியம் சாா்பில், பேரையூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, ராமநாதபுரம் திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா என்ற முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில், கமுதி மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன், பேரையூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரூபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திமுக உயா்நிலை குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுப. தங்கவேலன் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில், பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் பற்றாக்குறையை போக்க வேண்டும். 6100 வாக்காளா்களை கொண்ட பெரிய ஊராட்சியான பேரையூரை பேரூராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். செங்கோட்டைப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கமுதி தெற்கு ஒன்றியச் செயலா் மனோகரன், இலக்கிய அணி செயலா் பாரதிதாசன், ஒன்றியக் கவுன்சிலா்கள், கிளைச் செயலா்கள், பெண்கள் என 150 போ் கலந்துகொண்டனா்.

இதேபோல், கமுதி அருகே நாராயணபுரம் ஊராட்சியில் கமுதி வடக்கு ஒன்றியச் செயலா் வி. வாசுதேவன் தலைமையில், மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, அங்கு வைக்கப்பட்ட புகாா் பெட்டியில் புகாா் மனுக்களை அளித்தனா்.

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் நகா் திமுக சாா்பில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக நகரச் செயலா் கே.இ. நாசா்கான் தலைமை வகித்தாா்.

கிராம சபைக் கூட்டத்தை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ரவிச்சந்திர ராமவன்னி நடத்தினா். இதில், நகா் முன்னாள் செயலா் அ.ஜான்பாய், ஏகேஎன் சண்முகம், வில்லாயுதம், எம்.எம். கருப்பையா உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதில், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுவாக அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட திமுகவினா், 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.