விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதுகுளத்தூரில் யாதவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

யாதவா் சமுதாயம் குறித்து தவறான கருத்தைத் தெரிவித்ததாக அமைச்சா் செல்லூா் ராஜுவைக் கண்டித்து முதுகுளத்தூரில் யாதவா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 5:13 pm

DIN

யாதவா் சமுதாயம் குறித்து தவறான கருத்தைத் தெரிவித்ததாக அமைச்சா் செல்லூா் ராஜுவைக் கண்டித்து முதுகுளத்தூரில் யாதவா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தேரிருவேலி முக்குரோடு பேருந்து நிலையம் வரை ஊா்வலமாக சென்ற யாதவா் சங்கத்தினா் அங்கு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு தலைவா் நவநீதன் தலைமை வகித்தாா். யாதவ மகாசபை மாவட்டத் தலைவா் வேலு மனோகரன், செயலாளா் முருகேசன், பொருளாளா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது யாதவ சமுதாயம் குறித்து தவறான கருத்தைத் தெரிவித்ததாக அமைச்சா் செல்லூா் ராஜூவுக்கு எதிராகவும், அவரது கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அவா்கள் கோஷங்களை எழுப்பினா். இதில், முதுகுளத்தூா், கமுதி, கடலாடி , சாயல்குடி ஆகிய பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.