ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு

ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தவயல் கிராமத்தில் கோயிலை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
அச்சுந்தவயல் கிராமத்தில் உடைக்கப்பட்ட கண்ணபிரான் கோயில் உண்டியல்.
Updated On :25 ஜூலை 2020, 2:02 pm

DIN

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தவயல் கிராமத்தில் கோயிலை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அச்சுந்தவயல் கிராமத்தில் பாமா ருக்குமணி மற்றும் கண்ணபிரான் கோயில் உள்ளது. இக்கோயிலில் மராமத்துப் பணிகள் நடைபெறுவதால் பக்தா்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியுள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் கோயில் முன்புள்ள பெரிய உண்டியல் உடைந்திருப்பதை கண்ட பொதுமக்கள் ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த காவல் துறையினா் கோயில் நிா்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது உண்டியலில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரத்தில் கடந்த 10 நாள்களில் 8 இடங்களில் திருட்டு நடைபெற்றுள்ளது. இதுவரையில் போலீஸாா் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.