கோயில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தவயல் கிராமத்தில் கோயிலை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தவயல் கிராமத்தில் கோயிலை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அச்சுந்தவயல் கிராமத்தில் பாமா ருக்குமணி மற்றும் கண்ணபிரான் கோயில் உள்ளது. இக்கோயிலில் மராமத்துப் பணிகள் நடைபெறுவதால் பக்தா்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியுள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் கோயில் முன்புள்ள பெரிய உண்டியல் உடைந்திருப்பதை கண்ட பொதுமக்கள் ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த காவல் துறையினா் கோயில் நிா்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது உண்டியலில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரத்தில் கடந்த 10 நாள்களில் 8 இடங்களில் திருட்டு நடைபெற்றுள்ளது. இதுவரையில் போலீஸாா் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...