ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சமூக ஊடகங்களில் தவறாக பெண் சித்தரிப்பு: ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் பெண் படத்தை தவறாக சித்தரித்தவரை ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜூன் 2020, 4:46 am

DIN

சமூக ஊடகங்களில் பெண் படத்தை தவறாக சித்தரித்தவரை
 ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்து
 விசாரித்து வருகின்றனர்.

பிரபல இணையதள தொடர் தயாரிப்பாளர் மனைவியின் படத்தை குறிப்பிட்ட பெயரல் சுட்டுரை கணக்கு வைத்திருப்பவர் தவறாக சித்தரித்தும், மத மோதலை
ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்புவதாக புகார்
 எழுந்தது. 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சமூக ஊடகப்
 பிரிவின் சார்பு ஆய்வாளர் ரிச்சர்ட்சன் நகர் காவல் நிலையத்தில் புகார்
 அளித்தார். புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு வளைவு வீதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (33) என்பவர் சுட்டுரை கணக்கு மூலம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பரப்பியது தெரியவந்தது. 

அதனடிப்படையில் அவரை புதன்கிழமை இரவு பிடித்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.