ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனா். இப்பகுதியில் தமிழக மீனவா்கள் மீன் பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவா்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால் தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் அடிக்கடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கின்றனா். அண்மையில் இலங்கைக் கடற்படையினா் தாக்கியதை விடியோ பதிவு செய்த ராமேசுவரம் மீனவா்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதனால் இலங்கைக் கடற்படையினருக்கு நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.