திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்

மக்களவையில் ராகுல் காந்தி பேசியது குறித்து கங்கனா ரணாவத் விமர்சனம்...

News image

ராகுல் | கங்கனா ரணாவத் - sansad tv

Updated On :17 ஏப்ரல் 2026, 5:33 pm IST

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதைக் கேட்பதே பெரும் தலைவலியாக இருந்ததாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியை ஒரு மாயாஜாலக்காரர் என்று பேசியது பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

மக்களவையில் ராகுலின் உரை குறித்து செய்தியாளர்களுடன் பேசிய பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்,

"ராகுல் காந்தி பேசுவதைக் கேட்பதே பெரும் தலைவலியாக இருந்தது. அவர் தனது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட வருத்தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிறு வயதில் ஏற்பட்ட மன அதிர்ச்சிகளால், மாயாஜாலங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில ராகுல்தான் ஒரு மாயாஜாலக்காரர். பேசுவதை நிறுத்துமாறு அவைத் தலைவர் கூறியும் ராகுல் நிறுத்தவில்லை. அது தொல்லையாக இருந்தது. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார் ராகுல்" என்று கூறினார்.

Summary

BJP MP Kangana Ranaut says It was such a headache to listen to Rahul gandhi speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.