/

மோசமான வானிலை! உத்தரகண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

உத்தரகண்டில் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவரமாக தரையிறக்கப்பட்டது குறித்து...

News image

ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் நடுவழியில் அவசர தரையிறக்கம்... - ENS

Updated On :4 ஜூன் 2026, 8:26 pm IST

உத்தரகண்ட் சென்ற ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் நடுவழியில் அவசரமாகத் தரையிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 4) உத்தரகண்டின் அல்மோரா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.

இதனிடையே, மோசமான வானிலை ஏற்பட்டதால் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் பந்த்நகரில் அவரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அல்மோராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியால் நேரில் பங்கேற்க முடியாததால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அல்மோரா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி செல்போன் மூலம் தொடர்புக்கொண்டு உரையாற்றியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் தேவைகள் மற்றும் ஆளுங்கட்சியான பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி தனது 2 நாள் உத்தரகண்ட் பயணத்தில், முஸ்லிம் முதியவர் ஒருவரைக் கும்பலிடம் இருந்து காப்பாற்றியது மூலம் நாடுமுழுவதும் பிரபலமான பயிற்சியாளர் முஹம்மது தீபக் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும், பந்த் நகரின் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி விரைவில் அல்மோராவுக்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்.

Summary

Rahul Gandhi's helicopter, en route to Uttarakhand, made an emergency landing midway due to adverse weather conditions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.