நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறினாரா பிரகலாத் ஜோஷி? ராகுல் காந்தி விமர்சனம்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது...

News image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 8:30 pm IST

வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறியவருக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

இவர் ராஜிநாமா செய்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இளைஞர்கள் மற்றும் பெண்களின் போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. ’பாலியல் வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என்று கூறிய ஒருவரை பாஜக அரசு மத்திய கல்வித்துறை அமைச்சராக நியமித்துள்ளது. அவர் மிகவும் மோசமானவர். வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவரை விட மோசமானவர் யாருமில்லை. அவர்தான் தற்போதைய கல்வித்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

இது விசித்திரமானது. பிரதமர் மோடியின் இந்த செயல் விசித்திரமாக உள்ளது. அவரது அமைச்சரவையில் பலபேர் உள்ளனர். ஆனால் அவர், பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Opposition Leader Rahul Gandhi has alleged that the post of Union Education Minister has been given to a person who advocated for the protection of perpetrators of atrocities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.