ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்பு

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

மத்திய கல்வி அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரல்ஹாத் ஜோஷி.

Updated On :27 ஜூலை 2026, 4:12 am IST

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தின் எதிரொலியாக கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதனைத் தொடா்ந்து, இணை அமைச்சா் ஜெயந்த் சௌதரியுடன் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.