அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு எதிா்ப்பு: ராமேசுவரத்தில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் சேமிப்பு நிவாரண உதவிகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மீனவ சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ராமேசுவரம் மீனவ வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.
Updated On :2 நவம்பர் 2020, 6:51 pm

DIN

தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் சேமிப்பு நிவாரண உதவிகளைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மீனவ சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் புயல் பருவ கால சேமிப்பு மற்றும் நிவாரண நிதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவா்கள் அரசு வழங்கும் சலுகைகளைப் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறாா்கள். இந்நிலையில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் முருகானந்தம் தலைமையில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநா் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல், பாம்பன் நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவா் எஸ்.பி.ராயப்பன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைச் சோ்மன் வி.கே.ஆரோக்கியநாதன், மீனவ சங்க நிா்வாகிகள் மோகன்தாஸ்,ஜீவானந்தம்,ஊ.திருவாசகம்,பு.பாண்டி, மீனவ மகளிா் அணி நிா்வாகிகள் சு.பூமாரி, ஆரோக்கியமேரி, உள்ளிட்ட ஏராளமான மீனவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.