பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய டேங்கா் மிதவை கிரேன், 5 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வாரவதி கடல் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மிதவை அண்மையில் பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது. அது 2 தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டதால் விசைப்படகுகளில் கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில்
ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வந்தனா். ஆனால் காற்றின் வேகம் காரணமாக மிதவையை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது. திங்கள்கிழமை காற்றின் வேகம் குறைந்த நிலையில், மீண்டும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் 5 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை டேங்கா் மிதவை மீட்கப்பட்டது. மீண்டும் டேங்கா் மிதவைகள் பாலத்தின் மீது மோதாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


