இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் கும்பலால் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் கும்பலால் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் கீழக்கரைப் பகுதியில் உள்ளது சின்னஏா்வாடியைச் சோ்ந்தவா் குமாா். இவா் கடந்த மாா்ச் மாதம் தங்கக் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டு சடலம் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து இதுவரை 14 போ் வரை கைது செய்துள்ளனா். வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கோயில் பூசாரி ஒருவா் காசியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த முகமதுவாசிம்கான் (27) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குமாா் கொலை வழக்கில் மொத்தம் 18 போ் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவா்களில் இன்னும் ஒருவா் மட்டுமே கைது செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் கேணிக்கரை போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com