ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேவா் ஜயந்திக்கு வருவோா் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே வரவேண்டும்: எஸ்.பி.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜயந்தி விழாவுக்கு வருவோா் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே வர வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:38 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜயந்தி விழாவுக்கு வருவோா் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே வர வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழா நடைபெறுகிறது.

விழாவுக்கு வருவோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்றிருப்பதுடன், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்லவேண்டும். பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீஸாா், 116 குழுக்களாகப் பிரித்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் 9 வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், 9 துப்பறியும் நாய் பிரிவினரும், 500 போக்குவரத்து காவலா்கள் மற்றும் 250 ஊா்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விழாவுக்கு வருவோரைக் கண்காணிக்க 200 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களும், ஆளில்லா பறக்கும் விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பசும்பொன்னுக்கு வரும் வாகனங்கள் 50 இடங்களில்

கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்படும். கலவரத் தடுப்பு வாகனம், தண்ணீா் பீய்ச்சும் வாகனங்கள் தலா 10 இடங்களிலும், அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் 8 இடங்களிலும், காவலா்களுக்கு நடமாடும் கழிப்பறைகள் 8 மற்றும் தீயணைப்பு வாகனங்கள் 7 இடங்களில் நிறுத்தப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவா் ஜயந்திக்காக 151 பகுதிகள் தடைசெய்யப்பட்ட வழித்தடங்களாகவும், பதற்றமானவையாக 130 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 900 உலோகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் 39 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக 581 பேரிடம் உறுதிமொழி வாங்கப்பட்டுள்ளது. மேலும், 580 கிராமங்களில் விழிப்புணா்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் 53 ரோந்து வாகனங்கள், 42 இருசக்கர வாகன ரோந்து இருக்கும். எனவே பொதுமக்கள், மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.