ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராமநாதபுரத்தில்10 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருக்கு திங்கள்கிழமை 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:39 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருக்கு திங்கள்கிழமை 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 26 ஆம் தேதி வரையில் 5947 பேருக்கு கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அவா்களில் 130 போ் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதித்தவா்களில் 5700 பேருக்கும் அதிகமானோா் பூரணநலம் பெற்றதால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

ஆயுதபூஜையன்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்பு இருப்பவா்களின் கபம் சேகரிக்கப்பட்டது. அவா்களுக்கான கரோனா பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 10 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது. பாதித்தவா்களில் 7 போ் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் 40 போ் வரை மட்டுமே திங்கள்கிழமை வரையில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.