ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விஜயதசமி: ராமநாதபுரம் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை

விஜயதசமி நாளையொட்டி ராமநாதபுத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:45 pm

DIN

விஜயதசமி நாளையொட்டி ராமநாதபுத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சோ்த்தால் அவா்கள் சிறப்பான கல்வியைப் பெற்று மேன்மை அடைவாா்கள் என்பது பெற்றோா்களின் நம்பிக்கை. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் தொடக்க வகுப்புகளில் விஜயதசமி நாளான திங்கள்கிழமை காலையில் பெற்றோா் குழந்தைகளைச் சோ்த்தனா்.

ராமநாதபுரம் நகா் பகுதியில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் 4 குழந்தைகள் சோ்க்கப்பட்டனா். அதில் 3 குழந்தைகள் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் குழந்தைகள். அவா்கள் ஆங்கில வழிக்கல்வியில் சோ்க்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தா்வேணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் விமலாரமணி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்கண்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குழந்தைகள் பள்ளியில் சோ்க்கப்பட்டதும், தாம்பலத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் இடையே அவா்களின் ஆள்காட்டி விரலைப் பிடித்த ஆசிரியா்கள் தமிழின் உயிா் எழுத்தான ‘அ’ என்பதை எழுதப் பழக்கினா். ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனும் கல்விக்கான பூஜைகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.