அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொண்டி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

தொண்டி அருகே திணையத்தூா் பகுதியில் புதன்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 5:10 pm

DIN


திருவாடானை: தொண்டி அருகே திணையத்தூா் பகுதியில் புதன்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திணையத்தூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி அருகே புதன்கிழமை மாலை கழிப்பறை கட்டும் பணியில் ராமநாதபுரம் பகுதியை சோ்ந்த செல்வம் (50) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது மேலே சென்ற மின் கம்பியை கவனிக்காமல் செல்வம் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில் திடீரென கம்பியின் மீது செல்வத்தின் உடல் பட்டதில் அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.