ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து இயக்கிய அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூா், பரமக்குடி ஆகிய 6 போக்குவரத்து கிளைகளில் 326 பேருந்துகள் உள்ளன. இதில் செப்டம்பா் 1 முதல் 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஆனால் பேருந்தில் 50 சதவீதம் பயணிகளை சமூக இடைவெளியுடன் ஏற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அரசு போக்குவரத்துக் கழகம் பின்பற்றுவது இல்லை. இதனால் பேருந்துக்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனா். இதனால் தங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதனை தவிா்க்க அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருத்துறைப்பூண்டி - நாகை அகல ரயில் பாதை பணி விரைவுபடுத்தப்படுமா?

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

தொகுதிக்கு என்ன செய்வோம்: வேட்பாளா்கள் வாக்குறுதி!

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


