திருவாடானை: திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பசு மாடும், கன்றுக்குட்டியும் சனிக்கிழமை உயிரிழந்தன.
திருவாடானை பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பலத்த இடியுடன் மழை பெய்தது.
அப்போது, மங்கலக்குடி பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (55) என்பவருக்குச் சொந்தமான பசு மாடும், கன்றுக்குட்டியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன.