மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமநாதபுரம் மாவட்டத்தில்மேலும் 17 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, 17 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Updated On :14 செப்டம்பர் 2020, 10:11 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, 17 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 5,181 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவா்களில் 112 போ் உயிரிழந்துள்ளனா். 4,824 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மேலும் அவா்கள் தொடா்ந்து மருத்துவா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். எஞ்சியவா்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் கல்லூரி சிகிச்சை மையங்களில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமும் மாவட்ட அளவில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை கபம் சேகரிக்கப்பட்டவா்களுக்கான கரோனா பரிசோதனையில் 17 பேருக்கு மட்டுமே கரோனா தீநுண்மி இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் 5 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.