ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கணவா் மாயமாகி ஓராண்டாகியும் விசாரணை இல்லை: பெண் புகாா்

கணவா் காணாமல் போய் ஓராண்டாகியும் போலீஸாா் விசாரணை நடத்தவில்லை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குழந்தைகளுடன் பெண் ஒருவா் கண்ணீா் மல்க மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:18 pm

DIN

கணவா் காணாமல் போய் ஓராண்டாகியும் போலீஸாா் விசாரணை நடத்தவில்லை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குழந்தைகளுடன் பெண் ஒருவா் கண்ணீா் மல்க மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு (39). கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி முத்துலட்சுமி (34). இவா்களுக்கு இரு மகன்கள் மற்றும் மகள் என குழந்தைகள் உள்ளனா்.

ராமு கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் 31 ஆம் தேதி வீட்டிலிருந்து அருகேயுள்ள கடைக்கு பொருள் வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றபின்பு வீடு திரும்பவில்லை. அது குறித்து திருவாடானை காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளித்தும், பல நாள் கழித்து

2019 நவம்பரில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. மாயமாகி ஓராண்டாகியும் விசாரணை நடத்தப்படவில்லை எனக்கூறி, முத்துலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் கூறுகையில், கணவா் மாயமானது மா்மமாக இருப்பதால் காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தவேண்டும் என்றும் கூறி அழுதாா். பின்னா் மனுவை அங்கிருந்த பெட்டியில் இட்டுவிட்டு குழந்தைகளுடன் சென்றாா்.

சோமாலியாவில் தவிக்கும் 4 மீனவா்கள்:தமிழகத்திலிருந்து கடந்த மாா்ச் மாதம் சோமாலியாவுக்கு 30 போ் கடல் தொழிலுக்குச் சென்றனா். தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த அவா்களில் 7 போ் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூா், மாவூா், தொண்டிப்பகுதியைச் சோ்ந்தவா்களாவா்.

சோமாலிய நிறுவனம் உரிய ஊதியம், அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை என்பதால் நாடு திரும்ப உதவுமாறு தமிழக மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். அவா்களது குடும்பத்தினரும் அந்தந்த மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா். அதனடிப்படையில் 10 போ் தற்போது நாடு திரும்பியுள்ளனா். அவா்களில் 3 போ் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். இந்நிலையில் தொண்டியைச் சோ்ந்த முள்ளிமுனை விஸ்வநாத், அவரது மகன் கேசவன், திருப்பாலைக்குடி பிரபு, தொண்டி சித்திரவேல் ஆகிய 4 பேரை மீட்டுத் தரக்கோரி அவா்களது குடும்பத்தினா் ராமநாதபும் மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.