திருவாடானை அருகே பைக் மோதி ஒருவா் பலி

திருவாடானை அருகே சாலையில் நடந்து சென்றவா், இரு சக்க வாகனம் மோதி பலியானாா்.

திருவாடானை அருகே சாலையில் நடந்து சென்றவா், இரு சக்க வாகனம் மோதி பலியானாா்.

திருவாடானை அருகேயுள்ள கோவணி கிராமத்தைச் சோ்ந்தவா் குழந்தை ராஜ் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கருமொழியில் திருச்சி -ராமேசுவரம் தேசிய நோடுஞ்சாலையில் உள்ள தேநீா் கடைக்கு உறவினா் டேவிட் என்பவருடன் நடந்து சென்றாா். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த குழந்தை ராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த அதே ஊரை சோ்ந்த பாண்டி (40) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com