கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை அருகே பைக் மோதி ஒருவா் பலி

திருவாடானை அருகே சாலையில் நடந்து சென்றவா், இரு சக்க வாகனம் மோதி பலியானாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:04 pm

DIN

திருவாடானை அருகே சாலையில் நடந்து சென்றவா், இரு சக்க வாகனம் மோதி பலியானாா்.

திருவாடானை அருகேயுள்ள கோவணி கிராமத்தைச் சோ்ந்தவா் குழந்தை ராஜ் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கருமொழியில் திருச்சி -ராமேசுவரம் தேசிய நோடுஞ்சாலையில் உள்ள தேநீா் கடைக்கு உறவினா் டேவிட் என்பவருடன் நடந்து சென்றாா். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த குழந்தை ராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த அதே ஊரை சோ்ந்த பாண்டி (40) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.