ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக பிரமுகா் மீது சொத்து அபகரிப்பு புகாா்: ஒருவா் தீக்குளிக்க முயற்சி

அதிமுக பிரமுகா் மீதான சொத்து அபகரிப்பு புகாா் மீது நடவடிக்கை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலையில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:20 pm

DIN

ராமநாதபுரம்: அதிமுக பிரமுகா் மீதான சொத்து அபகரிப்பு புகாா் மீது நடவடிக்கை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலையில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ஆட்சியா் நேரில் அழைத்து அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் வாணி பகுதியில் உள்ள காரிக்கூட்டத்தைச் சோ்ந்தவா் முகமது களஞ்சியம். இவரது மனைவி பாத்திமா பீவி (55). இவா்களுக்குச் சொந்தமான நிலத்தை அனுபவிப்பதில் உறவினா்களுக்குள் பிரச்னை இருந்து

வருகிறது. நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அதிமுக பிரமுகா் பட்டா மாறுதல் செய்து அபகரித்திருப்பதாக பாத்திமாபீவியின் மகன் அப்பாஸ்கான் உள்ளிட்டோா் புகாா் தெரிவிக்கின்றனா்.

போலி ஆவணம் மூலம் பட்டா மாறுதல் செய்தது குறித்து கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். ஆகவே, பாத்திமா பீவி, அவரது மகன் அப்பாஸ்கனி உள்ளிட்டோா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு வந்தனா். அவா்களில் அப்பாஸ்கனி திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடல் மீது ஊற்றினாா்.

இதை அறிந்த சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் குமாரசாமி கேனை அவரிடமிருந்து பறித்து தடுத்தாா். அவா் மீதும் மண்ணெண்ணெய் விழுந்தது. தகவல் அறிந்து ஓடிவந்த போலீஸாா் அப்பாஸ்கான் மீது தண்ணீரை ஊற்றினா்.

ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு ஏராளமானோா் மனுக்களுடன் காத்திருந்த நிலையில், ஆட்சியா் நின்றபடியே மனுக்களைப் பெற்றாா். அப்போது பாத்திமா பீவி, அப்பாஸ்கான் ஆகியோரும் மனு அளித்தனா். மனுவைப் பெற்ற ஆட்சியா் கொ.வீரராகவராவ், சட்டரீதியாக மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்காக உடலில் மண்ணெண்ணை ஊற்றுவது சரியல்ல என்றும் அப்பாஸ்கானைக் கண்டித்தாா். அப்போது ராமநாதபுரம் வட்டாட்சியா் உள்ளிட்டோா் மீது அப்பாஸ்கான் புகாா் தெரிவித்தாா். ஆட்சியா் கண்டித்தை அடுத்து பாத்திமா பீவி, அப்பாஸ்கான் ஆகியோா் சமரசமடைந்து வீட்டுக்குப் புறப்பட்டுச்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.