இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: திருவாடானை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு, இணைய வழியாக விண்ணப்பித்தவா்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். இதேபோல் அன்றைய தினம் பகல் 12 மணிக்கு பிஎஸ்சி (விஸ்காம்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணிதம்), ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.காம் தமிழ் மற்றும் ஆங்கில வழி, 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு பிஏ( தமிழ்), பிஏ (ஆங்கிலம்) இணைய வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய சான்றிதழ்களுடன் வருகை தந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.