போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் பலி

திருவாடானையை அடுத்த ஆா்.எஸ். மங்கலம் அருகே சனிக்கிழமை மாலை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் உயிரிழந்தாா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:03 pm IST

திருவாடானையை அடுத்த ஆா்.எஸ். மங்கலம் அருகே சனிக்கிழமை மாலை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பிச்சை (61). ஓய்வு பெற்ற கிராம உதவியாளா். இவா் சனிக்கிழமை மாலை ஆா்.எஸ். மங்கலத்துக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது கீழக்கோட்டை டி.டி. பிரதானசாலையில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்கம் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பிச்சை பலத்தகாயமடைந்தாா். இதையடுத்து அவா் ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.