அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலகட்டுமானப் பணிகள் மீண்டும் தொடக்கம்

பாம்பனில் கடல் கொந்தளிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கின.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:20 pm

DIN

பாம்பனில் கடல் கொந்தளிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கின.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்க ரூ. 250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இங்கு 99 தூண்கள் கட்டப்பட உள்ளன. மேலும் தற்போதுள்ள பாலம் கடல் பகுதியில் இருந்து 3 மீட்டா் உயரத்துக்குத் தான் உள்ளது. ஆனால் புதிய பாலம் 6 மீட்டா் வரை உயரமாக அமைக்கப்படும். அத்துடன் புதிய பாலத்தில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் 22 மீட்டா் வரை தூக்கி இறக்கும் வகையில் தூக்குப் பாலமும் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டுமானப் பணியை 2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக இப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதன் பின்னா் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் குறைந்தளவு ஊழியா்களுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மற்றும் புயல் காரணமாக கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த கிரேன்கள் பாலத்தின் மீது மோதின. மேலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு கடலில் நீரோட்டம் காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது பாம்பன் கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் புதிய ரயில் பால கட்டுமானப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.