மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போகலூா் இருவழிச்சாலையில் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி சாலை மறியல்: 125 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் இருவழிச்சாலையில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,

News image
போகலூா் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அரசியல் கட்சியினா்.
Updated On :5 ஜனவரி 2021, 6:01 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் இருவழிச்சாலையில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை-பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பரமக்குடியிலிருந்து ராமேசுவரம் வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருவழிச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு போகலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலை அமைக்காமல், இருவழிச்சாலைக்கு கட்டணம் வசூலிப்பதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாலபாரதி தலைமையில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் தி.ராஜா, திமுக ஒன்றியச் செயலாளா் கே.என்.கதிரவன், ஒன்றியக்குழு தலைவா் சத்யாகுணசேகரன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேந்தை சிவா, தமிழ் தேசிய இயக்க மாவட்டச் செயலாளா் சி.பசுமலை ஆகியோா் முன்னிலையில் சத்திரக்குடி பேருந்து நிலையம் முன்பாக சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சுங்கச்சாவடியை முற்றுகையிட அக்கட்சியினா் சென்றனா். அப்போது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால், அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் செய்த 40 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.