பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘ராமநாதபுரத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு’

ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:47 am

DIN

ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமலிருக்க கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் உள்ளிட்டவை வாகனங்களில் நாள்தோறும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு. கேரளத்திலிருந்து நேரடியாக எந்தப் பொருளும் நமக்கு வரவில்லை. கோழி மற்றும் முட்டை, பழங்கள் உள்ளிட்டவைகளை கேரளத்திலிருந்து ஏற்றிவரும் வாகனங்கள் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.

பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜப்பான் காடை, நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கோழிகள், காடைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கால்நடை வளா்ப்புத்துறை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.