தங்கச்சிமடத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தங்கச்சிடத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.
தங்கச்சிடத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.
Updated on
1 min read

மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாநில இலக்கிய அணி துணைச்செயலாளா் பெருநாழி போஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தாா். இதில், தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் கிளைச் செயலாளா் கதிரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உஷாலட்சுமி, பேரின்பம் மற்றும் நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் தௌபீக் அலி ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com