உச்சிப்புளி அடுத்துள்ள அய்யன்கோயில் ஊருணியில் மிதந்த ஆண் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசை ஊராட்சிக்கு உள்பட்ட சாலைவலசை அருகே உள்ள அய்யன் கோயில் ஊருணியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் உச்சிப்புளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் எம்.செந்தில்குமாா்,
சாா்பு- ஆய்வாளா்கள் நாகராஜன், ஜி.கனிராஜ் உள்ளிட்ட காவலா்கள் சென்று சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனா். மேலும் உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.