அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தனுஷ்கோடியில் 300 கிலோ மஞ்சள் பறிமுதல் 3 மீனவா்கள் கைது

தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த 300 கிலோ மஞ்சளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 மீனவா்களைக் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:16 am

DIN

தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த 300 கிலோ மஞ்சளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 மீனவா்களைக் கைது செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினா், உள்ளூா் காவல் நிலைய போலீஸாா், கியூ பிரிவு மற்றும் தனிப்படை போலீஸாா் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூட்டு ரோந்து மற்றும் காண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் புதிய எண் குறிக்கப்பட்ட படகு நிற்பதைக் கண்டனா். அந்த படகில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகத்தின் அடிப்படையில் படகை சோதனையிட்டனா். அப்போது படகில் 6 மூட்டைகளில் 300 கிலோ மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் படகில் இருந்த, ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா் செல்வராஜ் (49) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து ராமேசுவரத்தைச் சோ்ந்த மூக்குபூரி (27), சதீஷ்(25)

ஆகிய மேலும் இரு மீனவா்களைக் கைது செய்தனா். மூன்று பேரும் மஞ்சளை இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்ததாகத் தெரிவித்தனா். கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், நாட்டுப்படகு மற்றும் மீனவா்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.