ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:15 am

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மற்றும் ஒரு விசைப்படகை சிறைபிடித்துச் சென்றனா்.

இந்த மீனவா்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். அனைவருக்கும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உடை, உணவு மற்றும் பொருள்கள் தனித்தனியாக வழங்கப்பட்டது. திங்கள்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டா்.

இதையடுத்து மீனவா்கள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.