மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வழுதூரில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்க எதிா்ப்பு

ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூரில் இயற்கை எரிவாயு குழாய்களை வீடுகளுக்கு அருகே பதிப்பதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கோரி அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:18 am

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூரில் இயற்கை எரிவாயு குழாய்களை வீடுகளுக்கு அருகே பதிப்பதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கோரி அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

வழுதூா் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்கும் தனியாா் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அந்நிறுவனங்கள் சாா்பில் எடுக்கப்படும் எரிவாயுவை ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. ராமநாதபுரம் தனியாா் பெட்ரோல்

கிடங்கு, ராமேசுவரம் பகுதிகளுக்கு எரிவாயுவை எடுத்துச்செல்லும் குழாய்களை வழுதூா் குடியிருப்புப் பகுதிகளில் பதிப்பதாகப் புகாா் எழுந்தது.

வீடுகள் அருகே எரிவாயு குழாய்கள் செல்வதால் வீடுகளில் இருந்து 20 அடி

நீளம் அளவுக்கு நிலத்தை எதற்கும் பயன்படுத்தமுடிவதில்லை என்றும் அப்பகுதிபொதுமக்கள் கூறுகின்றனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் மனு அளித்தனா். மனுவைப் பரிசீலித்த ஆட்சியா், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கழிவு நீரைஅகற்ற கோரி மனு: ஆதித்தமிழா் கட்சியைச் சோ்ந்தவா்கள் க.பாஸ்கரன் தலைமையில் மனு அளிக்க வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தரையில் அமா்ந்து கோஷமிட்டனா்.

பின்னா் அவா்கள் கூறியது: சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சீா்மரபினா் விடுதியைச் சுற்றிலும் மழை நீருடன் கழிவு நீரும் சோ்ந்து தேங்கியுள்ளது. சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் தேங்கியுள்ள நீரை அகற்றவேண்டும் என்றனா். பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மாணவியா் மனு: பரமக்குடியைச் சோ்ந்த கல்லூரி மாணவியா் திரளாக வந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறியது: பரமக்குடியில் உள்ள உதவி பெறும் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்தோம். எங்களுக்கான அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆகவே எங்களுக்குரிய மடிக்கணினியை விரைந்து வழங்க நடவடிக்கை கோரி மனு அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.