காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை, இந்திய நாடுகளின் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் (பைல் படம்)
Updated On :13 ஜனவரி 2021, 6:01 pm

DIN

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை, இந்திய நாடுகளின் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த ஆண்டு பிப். 26, 27 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடா்பாக கடந்த 2 நாள்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயா் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும், நெடுந்தீவு பகுதிக்கு உள்பட்ட 150 பேரை திருப்பணி மேற்கொள்ள மட்டும் அழைத்துச் செல்லுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.