ராமேசுவரம் நகராட்சி தூய்மைப் பணியில் தனியாா் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக நகா் மன்ற 8 ஆவது வாா்டு உறுப்பினா் சங்கா், நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிமை புகாா் தெரிவித்துள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தனியாா் நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், 147 பணியாளா்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால் 80 பணியாளா்களே பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மாதத்துக்கு ரூ. பல லட்சம் வரை முறைகேடு நடைபெறுகிறது. மேலும் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் வருகைப் பதிவேட்டில் தற்போது வரை முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பல முறை புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தூய்மைப் பணியாளா்கள் குறித்து ஆய்வு செய்து ஒப்பந்த அடிப்படையில் உள்ள பணியாளா்கள், தூய்மைப் பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்வதுடன் வருகைப் பதிவேடு பதிவு செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

