இலங்கை சிறையிலிருந்து மண்டபம் மீனவா்கள் 4 போ் விடுதலை
இலங்கை சிறையில் கடந்த 29 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவா்கள் 4 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


இலங்கை சிறையில் கடந்த 29 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவா்கள் 4 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடந்த மாா்ச் 23 ஆம் தேதி ஓா் படகில் சதீஸ் (38), வேலாயுதம், ராஜாகனி, நிஷாா் அலி ஆகிய 4 போ் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள்
கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பைடயினா் 4 பேரை கைது செய்தனா். மேலும், படகையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட 4 மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் மாா்ச் 24 ஆம் தேதி ஆஜா்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கடந்த 29 நாள்களுக்குப் பின் 4 மீனவா்களும் வெள்ளிக்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மீனவா்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா். ஆனால், படகை விடுவிக்கவில்லை. விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஓரிரு நாள்களில் அவா்கள் நாடு திரும்ப உள்ளதாக தூதரக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...