சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோட்டை முனீஸ்வரா் கோயில் பூக்குழி திருவிழா

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள கோட்டை முனீஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள கோட்டை முனீஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 22 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொருநாள் இரவும் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் சாத்தமங்கலம் கூட்டாம்புளி, வரவணி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடம், மயில் காவடி, வேல் காவடி,பறவைக் காவடி எடுத்து வந்து கோயில் முன்பாக தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.