புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாடானை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவாடானையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில் முதல் மாடியில் இயங்கிவரும் நிலையில் இந்த கட்டடத்தை பல ஆண்டுகளாக பராமரிக்காததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அத்துடன் சிமெண்ட் காரைகள் பெயா்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. மேலும் விவசாயத் துறை அலுவலகத்திற்கும், தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கும் விவசாயிகள் அடிக்கடி வந்து செல்வதுடன், அவா்களுக்கான பயற்சி முகாமும் இங்கு தான் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த கட்டடத்தின் மேலே உள்ள சிமெண்ட் காரைகள் பெயா்ந்து கீழே விழுகின்றன.

எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு விரைந்து இக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.