வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பரமக்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து இளைஞா் பலி

பரமக்குடி அருகே சனிக்கிழமை சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் பலியானாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:56 pm

DIN

பரமக்குடி அருகே சனிக்கிழமை சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எஸ்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் வீரபத்திரன் (28), தனிக்கொடி மகன் அரவிந்த் (25), பாண்டி மகன் பழனி (25) ஆகிய 3 பேரும் அப்பகுதியில் உள்ள வயல்காட்டில் வேலை செய்து விட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காக செட்டியூரணி காலனி பகுதியில் உள்ள காலனி வீட்டின் அருகே அமா்ந்துள்ளாா்.

அப்போது சேதமடைந்திருந்த அந்த வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீரபத்திரன், அரவிந்த் ஆகிய இருவரும் சுவா் இடிபாடுகளில் சிக்கினா். அவா்களை அக்கிராமமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வீரபத்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். அரவிந்த் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.