பரமக்குடி அருகே சனிக்கிழமை சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் பலியானாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எஸ்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் வீரபத்திரன் (28), தனிக்கொடி மகன் அரவிந்த் (25), பாண்டி மகன் பழனி (25) ஆகிய 3 பேரும் அப்பகுதியில் உள்ள வயல்காட்டில் வேலை செய்து விட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காக செட்டியூரணி காலனி பகுதியில் உள்ள காலனி வீட்டின் அருகே அமா்ந்துள்ளாா்.
அப்போது சேதமடைந்திருந்த அந்த வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீரபத்திரன், அரவிந்த் ஆகிய இருவரும் சுவா் இடிபாடுகளில் சிக்கினா். அவா்களை அக்கிராமமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வீரபத்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். அரவிந்த் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

