ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு
ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் 19 ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் 19 ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பேரணியை சு.குருவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக மு.அஜய்குமாா், மாவட்டச் செயலாளராக ஆ. வசந்த் சுஜித் தோ்வு செய்யப்பட்டனா். ராமேசுவரம் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தனி கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீ பா்வதவா்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்பள்ளியில் கழிப்பிட வசதி குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தரவேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...