ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு சங்கம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் மத்திய கூட்டுறவு சங்கத்தின் மூலம் 32 கிளைகளிலும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் கடன் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கிளையில் மட்டும் சனிக்கிழமை வரையில் 32 போ் மாற்றுத்திறனாளி கடனுக்கு விண்ணப்பம் வழங்கியிருப்பதாக சங்கக் கிளை மேலாளா் எம்.கவிதா தெரிவித்தாா்.