பரமக்குடி பகுதியில் பாா்த்திபனூா்- கமுதி புறவழிச்சாலை அமைக்கும் பணி மற்றும் மந்திவலசை வைகை ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்கும் பணி ரூ 45.64 கோடி மதிப்பீட்டில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதில், கமுதி- பாா்த்திபனூா் செல்லும் வகையில் 3.60 கி.மீ நீளத்திற்கு ரூ. 31.40 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியினை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து மதுரை-தனுஷ்கோடி சாலை மற்றும் ராமநாதபுரம்- மேலூா் சாலையை இணைக்கும் வகையில் நபாா்டு கிராமச்சாலைகள் திட்டத்தின் மூலம் மந்திவலசை வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 14.24 கோடி மதிப்பில் உயா்மட்டப்பாலம் அமைக்கும் பணியினையும் தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், ஒன்றியக்குழுத் தலைவா் சத்யாகுணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


